தொடரும் நண்பர்கள்

சனி, 7 அக்டோபர், 2017

ஈழத்தில் விளைந்த வீர தளபதிகள் - புலி பாய்ச்சலா, எலி ஓட்டமா

தோழமைகளே, 

முதல் வாரத்துக்கு பிறகு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் உங்கள் பதிவுகள் ஈழம் பற்றிய இணையத்தில் வந்த செய்திகள் தானே அதை ஏன் மீள் பதிவிடுகிறீர்கள்  என்பதே கேள்வியாக இருந்தது. 

ஆம். பல்வேறு இணையதளங்களில் இருந்து என்னால் தொகுக்கப்பட்ட செய்திகளைத்தான் பதிவுசெய்கிறேன். அதில் மறைப்பதற்கு ஒன்றும்  இல்லை. இந்த செய்திகளை  அறிந்திருந்தால் சரி, இல்லை என்றாள் எனது பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். செய்திகள் அனைத்தும் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுக்கபட்டது, மற்றும் புத்தகங்களில் இருந்து படித்து அறிந்துகொள்ளபட்டதும் தான்.

நான் செய்திகள் சேகரிந்த இணையதள முகவரிகளை பதிவிடுகிறேன். 

நன்றி நண்பர்களே !


புலிகள் இயக்கத்தில் சேர்ந்தாலும் பால்ராஜ் அவர்களுக்கு உதவியாளர் என்கிற  நிலைதான் இருந்தது. எடுபிடி வேலைகளை செய்துவந்தார்.  அந்த நேரங்களில் புலிகளுக்கான ஆயுத  பயிற்சி இந்தியாவில் நடந்துவந்த காலகட்டம், பாலசேகரன் என்கிற பால்ராஜ்க்கு   பயிற்சி உள்நாட்டிலே வழங்கப்பட்டது. அவரது பழைய தொடர்புகள் இந்திய ஆயுத பயிற்சியை வழங்க தடையாக இருந்தது. ஆனாலும் எந்த  பணியாக இருந்தாலும் பால்ராஜ் மிகுந்த உற்சாகத்தோடு செய்துவந்தார்.

முல்லைத்தீவு காடு என்பது அவருக்கு மிகவும் பரிச்சயமான ஒரு இடம்தான். இந்த ஒரு தகுதி அவரை அடுத்த நிலைக்கு தள்ளியது.

1984 ஆம் வருட மத்தியில் லெப்டினன்ட் காண்டீபன் அவர்களோடு ஒரு டிராக்டர் வண்டியில் வழி காண்பித்தபடி போய் கொண்டிருக்கும் போது சிங்கள அரச படைகளால் பதுங்கி இருந்து தாக்கபட்டார். அதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக  இந்தியாவிற்கு அனுப்பிவைக்க பட்டார்.


பால்ராஜ் சிகிச்சை பெறும் அதே மருத்துவ மனையில் தான் அன்றைய புலிகளின் ராணுவ தளபதி மாத்தையா அவர்களும் அனுமதிக்கபட்டிருந்தார். மாத்தையா அவர்களுடனான பழக்கம் பால்ராஜ் அவர்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும்.  மாத்தையாவுடன் நிகழ்ந்த இந்த சந்திப்பில் அவருக்கு உதவும் பொழுது தனது நிலபரப்பான முல்லைத்தீவு நகரம் பற்றியும் அதனை சூழ்ந்துள்ள காடுகளை பற்றியும் பால்ராஜ் தெரிவித்த கருத்துக்கள் குறிப்பாக மணல் ஆறு மற்றும் வெலிஓயா காடுகளை பற்றிய அவரது பூகோள அறிவு  மாத்தையாவிற்கு வியப்பை ஏற்படுத்தியது. தலைமையை  தொடர்பு கொண்ட மாத்தையா, பால்ராஜ் அவர்களுக்கு முதலில் மறுக்கப்பட்ட இந்திய ஆயுதத் பயிற்சியை வழங்க ஏற்பாடுசெய்தார். 

இந்தியாவில் புலிகளுக்கு வழங்கப்பட்ட ராணுவ பயிற்சியில் ஒன்பதாவது பயிற்ச்சி அணியில் பால்ராஜ்  இடம் பெற்றார். பயிற்ச்சி முடித்து 1984 ஆம்  வருடங்களின் பிற்பகுதியில் மாத்தையாவின் பாதுகாவலர்களில் ஒருவராக தன்னை இணைத்துகொண்டார். இருந்தாலும் அவருடைய புளொட் தொடர்பு பற்றிய தகவலினால் சமையல் அறையில் உதவியாளராக தான் இருக்க முடிந்தது.

புலிகள் இயக்கத்தில்  ஒருவர் மீது சந்தேகம் வந்துவிட்டால் , அந்த சந்தேகம் நூறு சதவீதம் தெளிவாகும் வரை வாய்ப்பு என்பது மறுக்க படும். அதற்கு யாரும் விலக்கு இல்லை என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளது. ஏன் பால்ராஜை இயக்கத்திற்கு கொண்டுவந்த மாத்தையா கூட அதற்கு விதிவிலக்கு இல்லை.

பால்ராஜ் தனக்கு வழங்கப்பட்ட சமையல் அறை உதவியாளர் வேலையை சர்வ சிரத்தையோடு செய்தார். சிறு சிறு தாக்குதல்களில் உதவிகளை புரிந்துவந்தார். 1986 ஆம் வருடம் புலிகளின் தாக்குதலில் ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டார். ஆனால் அந்த தாக்குதல்களில் பால்ராஜின் வேகத்தையும், விவேகத்தையும் கண்டு வியந்தவர்கள், புலிகளில் இரண்டாம் நிலை  தலைவராக இருந்த மாத்தையாவிடம் இதை தெரிவித்தார்கள். ஏற்கனவே பால்ராஜ் பற்றி அறிந்திருந்த மாத்தையா பால்ராஜை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகளை செய்தார்.  

வன்னி நிலபரப்புக்கு மாத்தையா பொறுப்பாளராக இருந்தாலும், புலிகளின் மூத்த உறுப்பினர்கள் ஜெயம், சுசீலன் மற்றும் பசீலன் ஆகியோர் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு ராணுவ பொறுப்பாளர்களாக  நியமிக்க பட்டார்கள்.

முல்லைத்தீவு என்றவுடன் பால்ராஜின் நினைவுதான் மாத்தையாவுக்கு வந்தது, அவரையே பசீலனுக்கு உதவுவதற்கு பசீலனின்  படையின் துணை தளபதியாக  நியமித்தார். பால்ராஜின் பூகோள அறிவுடன் இயற்கையாகவே அவருக்கு இருந்த கற்றுகொள்ளும் ஆர்வமும், சரியாக திட்டமிடும் அறிவும்  சேர்ந்து வெற்றிகரமாக செயல்பட முடித்தது. மணல் ஆறு மற்றும் வெலிஓயா காடுகளை பற்றி அங்குலம் அங்குலமாக தெரிந்தவராக இருந்தார். இதுவே புலிகளுக்கு மிகபெரும் பலமாக இருந்தது.

பால்ராஜ் அருகில் கடல் புலிகளின் தளபதி சூசை அவர்கள் 


1987 – இல் இந்திய அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகள் இடம்பெற்ற போது பால்ராஜ் கோப்பை என்ற இடத்தில நடைபெற்ற மோதலில் பங்குபெற்று இந்திய பீரங்கி ஒன்றை தனிநபர் தாக்குதலில் தகர்த்து எரிந்தார். இந்த மோதல் அவரது ராணுவ திறமையை புலிகள் அறிந்துகொள்ள உதவியது.

1988 – இல் இந்திய ராணுவ நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருத்த நாட்கள் , புலிகளில் தலைவர், மாத்தையா, மற்றும் புலிகளின் உயர்நிலை தளபதிகள் அனைவரும் வன்னி நிலபரப்பில் முல்லைத்தீவு காடுகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இந்த நேரத்தில் இந்திய படையுடன் நடைபெற்ற தாக்குதலில் பசீலன் மரணம் அடைந்தார். தளபதி இல்லாத படையாக நின்ற முல்லைத்தீவு  படையை பால்ராஜ் தலைமை ஏற்று தாக்குதலை முன்னெடுத்தார், பிறகு தலைவர் பிரபாகரனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார்.




பசீலன் அண்ணை மற்றும் இளமை கால பால்ராஜ் 

முல்லைத்தீவு தளபதியாக உயர்த்தப்பட்ட நேரத்தில் இந்திய படையின் கை உயர்ந்திருந்தது. புலிகள் மனதளவிலும், ஆயுத மட்டும் வீரர்கள் பற்றாக்குறையாலும் மிக மோசமாக பாதிக்கபட்டு இருந்த காலம். உடனடியாக இருக்கும் வீரர்களின் மனோதிடத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று நினைத்த பால்ராஜ், சரியாக  திட்டமிட்ட  இருவேறு தாக்குதல்களில் சுமார் 25 இந்திய வீரர்கள் வரை கொல்லப்பட்டதன் மூலம் புலிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கினார்  என்பதில் சந்தேகம் இல்லை.


கடல்புலி தளபதி சூசை மற்றும் பால்ராஜ் 


உலகின் ஒரு சிறந்த கமாண்டோ படையுடன் போரிடுகிறோம் என்கிற உணர்வு இருந்தாலும் தனது முடிவெடுக்கும் திறமையாலும், போர்முனையில் படையை தானே முன்னின்று நடத்தியதாலும் பல வெற்றிகளை குவிக்க முடிந்தது. இந்திய படைஅணி அங்கிருத்த காலகட்டங்களில் பல்வேறு தாக்குதல் திட்டங்களை புலிகள் நடத்தினாலும், ஒவ்வொரு களமுனைக்கும் நேரில் நடந்தே சென்று உத்வேகத்தையும், உத்திகளையும் வழங்கி இந்திய படைக்கு மிகபெரும் ஒரு சவாலாக திகழ்ந்தார். ( அந்த கால கட்டத்தில் புலிகளின் தலைவர் யாரையும் வாகனங்கள்  உபயோகிக்க தடை விதித்திருந்தார் , வாகன உபயோகம் புலிகள் என்பதை இந்தியா ராணுவத்திற்கு எளிதில் காட்டி கொடுத்துவிடும் என்பது தான் காரணம்)

மணலாற்று காட்டு பகுதியில் புலிகளின் தலைவர் முகாமிட்டு உள்ளார் என்கிற தகவலை அடுத்து இந்திய ராணுவம் தாக்குதலை தீவிரபடுத்தி தலைவரை கைது செய்ய வேண்டும் என்று முயற்சித்தார்கள். பால்ராஜ்க்கு இது மிகபெரும் ஒரு சோதனையான காலகட்டமாக இருந்தது. தலைவரை பாதுகாப்பதோடு அவரை பார்பதற்கு வருபவர்களையும் வரும் தகவல்களையும் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து வேலைகளையும் சரியாய் செய்துமுடித்து தலைவரின் நம்பிக்கைக்கு உகந்தவரானார்.

இந்திய ராணுவ முகாம் மீதான ஒரு தாக்குதலில் தளபதி பசீலன் அவர்கள் வீரசாவடைந்தார்.  அதை தொடர்ந்து தலைவரின் உத்தரவின் பேரில் வன்னி பிராந்திய  தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார்.  இதற்கு பின்னால் தலைவர் பிரபாகரனின் ஒரு தந்திர நடவடிக்கை இருந்தது. மணல் ஆறு பகுதியில் இடம்பெறும் ராணுவ நடவடிக்கைகளை இந்திய ராணுவம் குறைக்க வேண்டும் என்றால்  வன்னி பிராந்தியம் முழுவதும் ராணுவத்துக்கு எதிரான ஒரு தாக்குதல் நடவடிக்கை நடக்க வேண்டும். அதை நடத்த இந்த பிராந்தியம் முழுவதும் அறிந்த தளபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பால்ராஜை நியமித்தார். பால்ராஜ் தலைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவராக வன்னி பிரதேசம் முழுவதும் நடைபயணமாகவே சென்று படையை தயார் செய்து தாக்குதல்களை தீவிர படுத்தினார்.

ஒரு தாக்குதல் நடவடிக்கை திட்டமிவது என்பது சாதாரண விஷயம் இல்லை. தாக்குதல் நடத்த முதலில் சிறந்த அணியை தயாரிக்க வேண்டும், தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்களை சேகரிக்க வேண்டும், அதன் இயங்கும் திறனை சோதிக்க வேண்டும், எதிரியின் பலம், பலவீனம் அறிய உளவு பார்க்க வேண்டும். அந்த உளவு தகவல் சரியா  என்பதை சரி பார்க்க வேண்டும். திட்டம் தோல்வி அடையும் போது செயல்படுத்த மாற்று திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ செயல்பாடுகளை  திட்டமிட வேண்டும்.

ஆனால் எதிரி கண்ணில் பட்டவுடன் தாக்கவேண்டும் என்றால்  அந்த வினாடியில் அணியாக இணைத்து தாக்குதல் நடத்த சரியான ஒரு திட்டமிடல் நடத்த வேண்டும். அதன் படி வீரர்கள் நடக்க வேண்டும், அந்த திட்டம் தோல்வியில் முடிவடையும் போது மாற்று திட்டத்தை அமுல் படுத்த அதையும் யோசித்து வைத்திருக்க வேண்டும். பால்ராஜ் அவர்கள் இப்படிப்பட்ட வெற்றிகரமான  திட்டங்கள் தயாரிக்க ஒரு தொழில் முறை தளபதியாகவே மாறி இருந்தார்.


தலைவர் பிரபாகரனோடு தாக்குதல் திட்டத்தை பற்றிய விவாதம் 


இந்திய ராணுவத்தின் ஒரு விசேட கமாண்டோ அணி  “பதுங்கி தாக்குதல்” என்கிற முடிவை எடுத்து,  புலிகள் செல்லும் பாதையை அவதானித்து பதுங்கி இருந்தார்கள். அந்த விசேட அணியின் கால் தடங்களை கொண்டே இந்த பாதையில் பதுங்கி தாக்கும் முடிவுடன் இந்திய காமண்டோகள் எங்கோ பதுங்கி இருக்கிறார்கள் என்பதை பால்ராஜ் அறிந்துகொண்டார் .
தாக்குதல் திட்டத்தோடு இருந்த இந்திய படைகளை எதிர்கொண்டாரா..|? அல்லது இந்த பாதை நமக்கு வேண்டாம் என்று முடிவு செய்து வேறு பாதையில்  பயணித்தார ...? அடுத்த பதிவில் பாப்போம்,,,புலி பாய்ச்சலா, எலி ஓட்டமா...என்று 

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

ஈழ போராட்டத்தில் வீர தளபதிகள்



புலிகள் பற்றி பல்வேறு கருத்துகள் தமிழகத்தில் இருந்தாலும், அவர்கள் தீவிரவாதிகள் என்கிற நிலைபாடுகூட நம்மில் பலருக்கு உண்டு. என்னை பொறுத்தவரை சீனாவின் தன்னிகரற்ற தலைவர் “மாவோ” சொன்னதுபோல் “நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்கிற கூற்றை ஒட்டித்தான் நான் விடுதலை புலிகள் என்கிற அமைப்பை பார்கிறேன்.

புலிகள் ஆயுதம் ஏந்தியதாகட்டும், சக போராட்ட குழுக்களை அழித்ததாக இருக்கட்டும், ஒற்றை தலைமை  என்கிற முடிவாகட்டும், அந்த இடத்தில்  நாம் இருந்தால்தான், நேரிடையாக பாதிக்கபட்டால்தான்  அங்கு எடுக்கப்பட்ட முடிவு சரியா..? இல்லை தவறா என்று வாதிட முடியும். ஒவ்வொரு முடிவுக்கு பின்னும் அது எடுக்க பட்ட சூழ்நிலையின் பின்னணியை சரியாக ஆராய்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால், அதில் மறைந்திருக்கும் உண்மையின் உக்கிரம், முடிவு அவர்கலுக்கு சரி என்பதாக தான் இருக்க முடியும்.

நோக்கம் நிறைவேறினால் போராட்டங்கள் அனைத்தும் சரித்திரமாக பார்க்க படும், அதில் எடுக்க பட்ட முடிவுகள் அனைத்தும் மிக சிறந்த ராஜதந்திர முடிவுகளாக பார்க்கப்படும். ஆனாலும் கூட அனைத்து முடிவுகளும் விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்.

இந்திய படைகளை எதிர்த்து புலிகள் களமாடியபோதும், இந்திய வீரர் ஒருவர் மாண்டாலும்  சரி, நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போதும் சரி நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.


புலிகள் என்கிற  இயக்கம் இனி இல்லை என்கிற நிலை இன்று இருக்கிறது, நாம் இந்த கட்டுரையில் பார்க்கபோவது புலிகள் இயக்கம் சரியா..? இல்லையா..? என்பதை பற்றியோ, அவர்களது முடிவுகளை பற்றியோ அல்ல. சக தமிழனாக புலிகள் இயக்கத்தில் மிக பெரும் தாக்குதல்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற வீர தளபதிகளை பற்றி ஒரு பதிவை ஏர்படுத்த வேண்டும் என்கிற எனது எண்ணம் சரி என்று நினைக்கிறேன்...எனது இந்த எழுத்தும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல...


மனதை கவர்ந்த வீரன் 

அன்று செவ்வாய்கிழமை புலிகள் இயக்கத்தில் உயர்நிலை போராளிகள் அனைவரும் இன்று இந்த இயக்கம் ஒரு மாபெரும் இழப்பை சந்திக்கபோகிறது என்று தெரியாமல் தாங்கள் வழமையான பயிற்சிகளிலும், திட்டமிடுதலிலும்  நேரத்தை செலவிட்டார்கள்.

மதிய நேரம் பிற்பகல் 2:00 மணியளவில் தனி ஈழ கனவுகளை சுமந்துகொண்டு இயங்கிய ஒரு தன்னிகரில்லா இதயம் நின்றுபோனது. இயக்கத்தின் கடைநிலை வீரன் வரை கவலை கொள்ள வைத்த ஒரு மாபெரும் இழப்பு.  இன்னும் சொல்ல வேண்டும் என்றால்  எதற்கும் கலங்காத இயக்கத்தின் தலைவரும் கலங்கிதான் போனார். முழு இயக்கத்தையும் அசைத்துபார்த்த ஒரு  துக்க நிகழ்வு அது. 

எத்தனையோ  நாட்கள், எதிரியின் மீது  தாக்குதல்ககளுக்கு போகும் போது திரும்பிவருவது நிச்சயம் இல்லை என்று தெரிந்து முன்சென்ற இந்த வீர தளபதி, அனைத்திலும் வென்று உயிருடன் திரும்பினார் , இந்த ஒரு நாளை தவிர...

யார் அந்த வீரன் , அப்படி என்ன சாதித்தார்.. வாருங்கள் தோழர்களே ஒரு வீர தமிழனை பற்றி பார்ப்போம்...|



முல்லை தீவு மாவட்டத்தின் அழகான ஒரு கடற்கரை கிராமம். ஒருபக்கம் கடல் , மறுபக்கம் காடுகளும், வயல்வெளியும், தோப்புகளும் நிறைந்த ஒரு கிராமம் “கொக்குத்தொடுவாய்”. இங்கு  1965 ஆம் வருடம் நவம்பர் 27 ஆம் தேதி கந்தையா, கண்ணகி தம்பதிகளின் நான்காவது பிள்ளையாக பிறந்தார். இவர் பிறந்த தினமே பால்ராஜ் ஒரு மிகபெரும் வீரனாக உருவாக போகிறான் என்பதை எடுத்துக்காட்டியது. (நவம்பர் 27-ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினமாக புலிகள் அனுசரிகிரார்கள்) தந்தை தாய் இட்ட பெயர் பாலசேகரன். இயக்கம் அவருக்கு சூட்டிய பெயர் பால்ராஜ்.

தனது பள்ளிப்படிப்பை கொக்குத்தொடுவாயிலும் உயர் கல்வியை புல்மோடை என்னும் இடத்திலும் நிறைவுசெய்தார். இயற்கையாகவே பால்ராஜ் படிப்பில் கெட்டிக்காரர். அவரது குடும்பம் அவரை கல்லூரி படிப்புக்கு தயார் செய்யவேண்டும் என்கிற நினைவோடு இருந்தது.  அந்த கால கட்டங்களில்  தமிழர் சிங்களர் என்கிற பாகுபாடு கடற்கரை கிராமங்களில் கிடையாது. அங்குவரும் சிங்கள மீனவர்களிடம் சிங்கள மொழியை பேசுவதற்கு கற்று கொண்டார். இயற்கையாகவே படிப்பின் மீது இருந்த ஆர்வம் ஆங்கிலத்தையும் ஓரளவுக்கு பேசும் தகுதியை அவருக்கு கொடுத்தது. பல்கலை மாணவனாக வேண்டும் என்று அவரது குடும்பம் நினைத்தது.  ஆனால் தமிழர் உரிமைக்காக போராடும் ஒரு போராட்ட குழுவோடு இணைந்து தனது பங்களிப்பை செய்யவேண்டும் என்பதே பால்ராஜின் கனவாக இருந்தது.

பள்ளி பருவங்களில் வேட்டையாடுதல் என்கிற கலையில் தேர்ச்சிபெற்று, வேட்டையாடுவதற்கு முல்லைத்தீவு காட்டு பகுதி முழுவதும் சென்றாதால், அவர் கால்படாத தடமே இல்லை என்றானது.

வேட்டையாடுதல் என்பது அவ்வளவு இலகுவான ஒரு கலை அல்ல. மிகுந்த பயிற்சி வேண்டும். மிருகங்களை மிகுந்த பொறுமையுடன் திட்டமிட்டு வேட்டையாடவேன்டும். காலடி தடங்கள், மிருக வாடை, பறவைகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். மிருகங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை இப்படிதான் நடந்துகொள்ளும் என்று அவதானிக்க, மிருகங்களின் எதிர் வினைக்கு ஏற்ப அந்த நிமிடத்தில் திட்டத்தை மாற்றி புதிய தாக்குதல் திட்டமிட ஒரு கூரிய, பதற்றம் அடையாத  புத்தி வேண்டும். இவை அனைத்தும் இயற்கையாக பால்ராஜூக்கு இருந்ததனால் ஒரு வெற்றிகரமான வேட்டையனாக திகழ்ந்தார்.

 1982 ஆம் வருடங்களில்  “புளொட்” இயக்கத்தை சேர்ந்தவர்கள் சற்று சுறுசுறுப்பாக ஆட்கள் சேர்ப்பு பணியில் இயங்கி கொண்டிருந்தார்கள். எ
ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் வந்த  புளொட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்தவிதமான வீர தீர நடவடிக்கையும் (ACTION BLOCK)   இடம்பெற வில்லை என்பதே மிகுந்த வருத்தம் அளிப்பதாக இருந்தது.

1983-இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் மீண்டும் ஏதாவது செய்யவேண்டும் என்கிற எண்ணவோட்டத்தை அதிகபடுத்தியது. அப்பொழுது பிரபலம் ஆக ஆரம்பித்த விடுதலை புலிகள் இயக்கம் அவரை கவர்ந்தது. புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். ஆனாலும் புளொட் பின்புலம் புலிகளால் அவரை சற்று ஐயத்துடனே பார்க்கவைத்தது.

ஐயம் தெளிந்ததா? இந்த வீரன் என்ன செய்தான்...வரும் வாரங்களில் பாப்போம் தோழர்களே..!




சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...