தொடரும் நண்பர்கள்

ஞாயிறு, 11 ஜூன், 2017

டாக்டர் மரியா மாண்டிசோரி

இன்று காலை எனது சகோ செந்தில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது மகன் ஈவேரா ( தந்தை பெரியாரின் மீது மிகுந்த அன்பு கொண்டவன், அந்த அன்பில் வெளிப்பாடுதான் மகனுக்கு ஈவேரா என்கிற பெயர்) பள்ளிக்கு முதன்முரையாக செல்வதால் நீங்கள் வாழ்த்துங்கள் என்று தொலைபேசியை அவனிடம் கொடுத்தான் மழலைக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு செந்திலுடன் பேசும்போது எந்த பள்ளியில் சேர்த்திருகிறாய் என்று வினவினேன்.

பள்ளியின் பெயரை உடனே கூகிள் உள்ளே போய் பார்த்தேன்...அவர்கள் மாண்டிசொரி முறையிலான கல்வியை வழங்குகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்...

மாண்டிசொரி முறை பற்றி (நாம் படித்த களத்தில் இம்முறை இல்லையே என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது.. இருந்தால் மட்டும் என்று ஏனது ஆசிரியரின் எண்ணஓட்டதையும்   கேட்க முடிகிறது...!) முன்னொரு காலத்தில் படித்த விசயங்களை உங்களோடு பகிர்துகொண்டால் என்ன என்று தோன்றியது....வாருங்கள் நண்பர்களே அவரை பற்றி பார்ப்போம்...



1870 ஆம் வருடம் இத்தாலியின் சிராவல் நகரில் அலெசான்ரோ மற்றும் ஸ்டாப்பாணி தம்பதிக்கு பிறந்த மகள் தான் மரியா மாண்டிசோரி. பிறந்த ஒருவருடகாலத்தில் 1871 - இல் இத்தாலியின் ரோம் நகருக்கு குடிபெயர்ந்தார்கள். அவருடைய தந்தை அலெசான்ரோ - ஒரு அரசாங்க அதிகாரி ஆவர்.

அரசாங்க ஆரம்ப பள்ளியில் தனது படிப்பை துவங்கினாலும்,  ஆண்களால் சூழப்பட்ட ரோம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ துறையில்  முதல் பெண்ணாக நுழைந்து, இத்தாலியின் முதல் பெண் மருத்துவராக பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமான வெளிவந்தார். இதில் முக்கியமானது அவரது தந்தை எப்படியாவது அவரை ஒரு ஆசிரியை ஆக்கவேண்டும் என்று முயன்றார். ஆனால் அந்த  எதிர்ப்பையும் மீறித்தான் மாண்டிசோரி  மருத்துவர் ஆனார்.  அப்பொழுது அவருக்கு தெரியாது, அவர் வேண்டாம் என்று  ஒதுக்கி தள்ளிய கற்பித்தலை செய்யவும், கற்பித்தலுக்கு ஒரு சிறந்த முறையையும் உருவாக்க போகிறோம் என்று...



டாக்டர் மரியா மாண்டிசோரி தனது மருத்துவ வாழ்க்கையை ஆரம்பித்த உடனேயே, மகளிர் உரிமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திகொண்டார் சமூகத்தின் எல்லா  வகுப்பு நோயாளிகளுக்கும் அவர் அளித்த உயர் சிகிச்சைக்காகவும், அவர் காட்டிய மரியாதைக்காகவும் எல்லோராலும் அறியப்பட்டார். 1897 ஆம் ஆண்டில், டாக்டர் மாண்டிசோரி ஒரு தன்னார்வளராக, ரோம் பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவ துறையில்  ஆராய்ச்சி திட்டத்தில் தன்னை இனைத்துகொண்டார்

அந்த ஆராய்ச்சி கற்றல் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை  பற்றியது. சிலநாட்களில் அவருக்கு மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்திய ஒரு விசயமாக ஆகிவிட்டது.  அதே  நேரம் மாண்டிசோரி ஆர்த்தோபிரானிக் பள்ளி ஒன்றில் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

தனது இருபத்தி எட்டாவது வயதில் மாண்டிசோரி, சமூகத்தின் ஆதரவின்மையே மனவளர்ச்சி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளின் அவல நிலைக்கு காரணம் என்று தனது கருத்தை உரக்க பதிவு செய்தார். அன்றைக்கு (இன்றைக்கும்) மனவளர்ச்சி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளின் நிலை மிகவும் கொடுமையானது. அப்பொழுது அவரது அயராத சிந்தனையியிலும், இடைவிடாத முயற்சியாலும் உருவாகியது தான் மாண்டிசோரி கற்பித்தல் முறை.
 
1909-ல் டாக்டர் மாண்டிசோரி ரோம் நகரில் தனது சொந்த கல்வி 
நிறுவனமாக  “காசா டீ பாம்பினி”யைத் திறந்ததார்.  அவர் 
ஆர்த்தோபிரானிக் பள்ளியில் அவரால் உருவாக்கப்பட்ட கல்வி 
கற்பித்தலுக்கான பொருட்களை மாதிரியாக கொண்டு அந்த பள்ளியை 
மேம்படுத்தினார். 


குழந்தைகளுக்கு  தாங்கள் கற்பதற்கு  சரியான  சூழ்நிலையையும், சரியான உபகரணங்களையும் உருவாக்கி தந்தால், அவர்களது கற்கும் திறன் மிக அதிகமாகவும், எளிதாகவும் இருப்பதை உணர்ந்துகொண்டார்.

அவர் உருவாக்கிய கற்பித்தல் முறையை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..

குழந்தைகளால் எளிதாக கையாலகூடிய உபகரணங்களை தேர்ந்தெடுத்து, காட்சியில் வைத்து, அவற்றை கொண்டு குழந்தைகளே கற்றுகொள்ளும் வகையில் வடிவமைத்தல்.

மாண்டிசோரி அம்மையார், சில பிரத்யேக உபகரணங்களை உருவாக்கினார். அந்த உபகரணங்கள் விஞ்ஞான அடிப்படையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை. கணிதம் சார்ந்த கருத்தடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பெளதீகப் பண்புகளைக் கொண்டவை.









இத்தகைய உபகரணங்களின் மூலம் செயல்பாடுகளை மேற்கொண்ட குழந்தைகளுக்கு, அந்த உபகரணங்களைப் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கிறது. அதன் பெளதீகப் பண்புகளை அடையாளம் கண்டு, பார்க்குமிடங்களிலெல்லாம் உற்சாகத்துடன் தெரிந்து கொள்கிறார்கள். நுணுக்கமாக செயல்படுவதன் மூலம், குழந்தையின் அறிவுக்கும் நுட்பமான விபரங்கள் கிடைக்கின்றன. இதனால் குழந்தையின் ஆளுமையும் வளர்கிறது. இதன்மூலம், குழந்தைக்கு விஞ்ஞான ரீதியில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது.




இப்படி பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உபகரங்களை கொண்டு கணிதம், மொழியியல் போன்றவை மிக சிற்பாக கற்பிக்கப்படுகிறது.
  
இந்த முறையை மக்கள் அவளவு சுலபமாக ஏற்றுகொள்ளவில்லை. 1912 ஆம் வருடத்தில் இவரது கற்பித்தல் முறை அமெரிக்காவில் அறிமுக படுத்தபட்டது. மெல்ல மெல்ல ஐரோப்பாவின் மற்ற பாகங்களுக்கும் பரவியது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க பட்டது. கிட்டத்தட்ட ஐரோப்பாவின் பெரும்பான்மை நாடுகள் அவரை தங்கள் நாட்டுக்கு அழைத்து அந்த முரையில் கற்பித்தலை ஆரம்பித்தார்கள். 1939 வரை எல்லாம் சரியாக போய்கொண்டிருந்தது.

இந்தியாவிற்கு மாண்டிசோரி முறை வருவதற்கு அதுவும் மருத்துவர் மாண்டிசோரி நேரிடையாக இந்த முறையை பயிற்ரு வித்ததர்க்கு நாம் ஹிட்லருக்கு நன்றி சொல்ல வேண்டும்.



இந்தியா, இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் வெளியிட்ட தபால் தலைகள் 

நாசிக்களின் ஆட்சியில் மாண்டிசோரி முறை தடை செய்யப்பட்டது. மருத்துவர் மாண்டிசோரி தனது மகன் மரியோ-வை அழைத்துக்கொண்டு Theosophical Society of India  வின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வந்தார். அவருக்கு கலாசேத்ராவை உருவாக்கிய திருமதி ருக்மணி தேவி அருண்டெல் உடன் அடையாரில் தங்கினார். இரண்டாம் உலகப்போர் அவரது இந்திய பயணத்தை 1946 வரை நீடித்தது.

இந்த காலகட்டத்தில் பலநூறு ஆசிரியர்களுக்கு இந்த கற்பித்தல் முறையை அவர் கற்பித்தார்.   சில வருடங்கள் அவர் வீட்டுகாவலில் இருக்கவேண்டிய சூழலை இரண்டாம் உலகப்போர் ஏற்படுதியது. அந்த சூழ்நிலையிலும் அவர் பலருக்கு கற்பித்தல் முறையை கற்பித்து இன்று வரை இந்தியாவில் இந்த பயனுள்ள முறை உருவாவதற்கு  உதவினார்.

இத்தாலிநாடு வெளியிட்டுள்ள அந்நாட்டு பணம் 

1946 –இல் ஐரோப்பா திரும்பினாலும் அவரது இடைவிடாத கல்வி பணி தொடர்ந்தது. குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இந்த நீண்ட நெடிய ஒரு போராட்டம் 1952 மே – 6 அன்று முடிவுக்கு வந்தது. தனது 89வது  வயதில் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது பணி இன்றுவரை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மாண்டேசியர்களின் வடிவில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
 
"நான் குழந்தைக்கு என் விரலை சுட்டிக்காட்டுகிறேன்.
ஆனால் நீ ஏன் என் விரலைப் பாராட்டுகிறாய்?" –
என்பது தான் அவரது கடைசி வார்த்தையாக இருந்தது...

ஒப்பற்ற ஒரு கல்வி முறையை வழங்கி சென்ற மருத்துவர் மரியா 
மாண்டிசோரி மனிதர்கள் கற்கும் வரை இந்த உலகத்தை விட்டு 
போக மாட்டார்... என்பது உறுதி...
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...