தொடரும் நண்பர்கள்

திங்கள், 13 நவம்பர், 2017

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?



மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ளியியல்  நிருவனத்திலும் , அதற்கு பிறகு புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும்  (Harvard University) பயின்றவர். 

(சுப்பிரமணியன் சுவாமி அன்றும் இன்றும் )

இந்தியா மெச்ச வேண்டிய ஒரு புத்திசாலி இவர். இந்திய அரசியலில் அவர் நுழையாமல் தனது அறிவை இந்தியாவின் முன்னேற்றத்திருக்கு பயன் படுத்திருப்பாரே ஆனால், இன்று இந்தியா  இந்த மேதையை கொண்டாடி இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்க வில்லை என்பதை விட , அவர் அதை வழங்கவில்லை என்று சொல்லுவதே  சரி என்று நினைக்கிறேன்..


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோடு 

அவரை ஒரு சிறந்த அறிவாளி என்று சொல்லுவதற்கு இரண்டு விசயங்களை நாம் பார்த்தாலே போதும்...

ஒன்று

ஹார்வர்டு பல்கலை கழகத்தில் சேர்ந்து ஒரு சில நாட்களில் உலக புகழ் பெற்ற கணித மேதையும் பேராசிரியருமான திரு பால் சாமுவேல்சன் அவர்களது வகுப்பு. கரும்பலகையில் அவர் எழுதி இருந்த ஒரு கணித சூத்திரத்தில் தவறு இருப்பதை சுப்பிரமணியன் சுவாமி எழுந்து சுட்டி காட்டினார். 


வகுப்பு எடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி


அந்த தவறை ஒத்து கொண்ட பேராசிரியர் சாமுவேல்சன் உடனடியாக அதை திருத்தி கொண்டார். அன்றில் இருந்து சாமுவேல்சனுக்கு சுப்பிரமணியன் சுவாமி செல்ல பிள்ளை ஆகிவிட்டார்.

இரண்டு

பொருளாதாரத்தில் தனது முனைவர் பட்டம் பெறுவதற்க்கான ஆய்வை ஹார்வர்டு பல்கலை கழகத்தில் செய்துகொண்டிருந்தார். ஒரு ஆய்வாளனுக்கு வழங்கப்படும் கால அளவு குறைந்தபட்சம் நான்கரை ஆண்டுகள், நமது சுவாமி தனது ஆராய்ச்சி முடிவுகளை சுமார் பதினெட்டு மாதங்களில் பல்கலை கழகத்தில் சமர்ப்பித்து அதற்கான சிறப்பு அனுமதியையும் பெற்று இரண்டு வருடங்களில் வெற்றிகரமான ஒரு முனைவராக வெளிவந்தார். 

முன்னாள் பிரதமர் மொராஜ் தேசாய் மற்றும் சுப்பிரமணியன் சாமி 


இந்த இரண்டு நிகழ்வுகள் அவரது அறிவு கூர்மைக்கு சொல்ல பட்ட சாதாரண நிகழ்வுகள் தான். இதை போல் எத்தனையோ நிகழ்வுகள்.

இப்படி பட்ட அறிவாளி, புத்திமான், ஏன் இப்படி...

எத்தனையோ ஊழல் வழக்குகளை தாக்கல் செய்தவர், நிறைய அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். இவரை நினைத்தாலே சிலருக்கு தூக்கம் தொலைந்துவிடும். குமரிமுனையில் ஒரு கடையில் தயாநிதிமாறன் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து காஷ்மீர் தீவரவாதிகளுக்கு முஷாரப் உப்புமா சமைத்து கொடுத்ததுவரை தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்லுவார். யாரும் எதிர்பார்க்காமல் ஒரு சில ஆதாரங்களை அணுகுண்டாய் வீசுவார்.


நரசிம்மராவுடன் 


அவரது கிரகம் அவரை இப்படி ஆட்டிவைப்பதாகவே நினைக்கலாம்..சரி விசயத்திற்கு வருவோம் 

கைலாஷ் மனோசரோவர் யாத்திரை

கைலாஷ் மனோசரோவர் யாத்திரை என்பது இந்துகளின்  புனித யாத்திரையாக சொல்லப்படுகிறது. இதை   வருடா  வருடம் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து செல்லும் இந்துக்கள்  மேற்கொள்கிறார்கள்.  இந்த  மனோசரோவர் ஏரி திபெத்தில் உள்ளது. திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று சீனா சொல்கிறது. இந்த யாத்திரை போவதற்கு சீனா தடைவிதித்தது. 

ஒபாமாவுடன்..


இந்த தடையை சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தனது முயற்சியால் சீன அதிபர் திரு ஷி ஜிங்பிங்கை சந்தித்து நீக்கினார். இது எப்படி சாத்தியம் ஆனது..?. சீனாவிற்கு சுப்பிரமணியன் சுவாமி யார்...? இந்திய அரசியல் வாதி தானே, அவர் சொல்லி எப்படி இது சாத்தியம் ஆகியது... விடை வேண்டும் என்றால் நாம் 1970களை நோக்கி பயணிக்க வேண்டும்




சுப்பிரமணியன் சுவாமி அப்பொழுது ஹார்வர்டு பல்கலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். சீன மொழியை கற்கவேண்டும் என்று முயற்சி எடுத்து கற்றுகொண்டார். அதன் தொடர்ச்சியாக ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதினார். –“1952-70 இந்திய சீன - பொருளாதார வளர்ச்சி” – என்பது தான் தலைப்பு. அன்றைக்கு சீன பொருளாதார அறிஞர்களால் நிராகரிக்க பட்ட ஒரு படைப்பு. அன்று நிராகரிக்க பட்டதற்கு காரணம் சீனாவின் வளர்ச்சி உண்மை இல்லை, அவர்களது புள்ளி விவரங்கள் அனைத்தும் மிகைபடுத்த பட்ட ஒன்று, உதாரணத்திற்கு விலை குறைந்த சோளம் பயிரிடப்பட்டு விளைந்த பின்னர் அதன் விளைச்சல் பணபயிர்களில் சேர்க்கபட்டு விவசாய வளர்ச்சி அதிகரித்து காட்டப்படும் இப்படி எத்தனையோ விசயங்களில் சீனாவின் வளர்ச்சி அதிகரித்து காட்டப்பட்டுள்ளதாக தனது ஆராய்ச்சியில் தெளிவாக சொல்லி இருந்தார். 


“Economic Growth in China and India, 1952-70 “– சுப்பிரமணியம் சுவாமி
University of Chicago Press (28 December 1973)
 
அமேசானில் ருபாய்   7,889.76க்கு கிடைக்கிறது.
 
 சீனா இதை கடுமையாக எதிர்த்தது.
 
பிறகு எப்படி சுப்பிரமணியன் சுவாமியின் வேண்டுகோளை சீனா கைலாஷ் மனோசரோவர் விசயத்தில் ஏற்றுகொண்டது...?வாருங்கள் பார்ப்போம்.
சீனா உலக வங்கியில்  குறைந்த  வட்டிக்கு கடன் கேட்டது, உலக வங்கி அவர்களது பொருளாதார அறிக்கையை காரணம் காட்டி, உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க இயலாது, நீங்கள் வளர்ந்த நாடு என்று பதில் அளித்தது.

சீனா தவித்து போனது, அந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு, அதற்கு சாட்சியாக திரு சுப்பிரமணியம் சுவாமியின் ஆய்வறிக்கையை வழங்கியது, கடனும் கிடைத்தது.

அன்றில் இருந்து திரு சுப்பிரமணியன் சுவாமி சீனாவின் கவுரவ விருந்தினர்தான். அவரை சீனா வெளியுறவுத்துறை கைலாஷ் கைலாஷ் மனோசரோவர் யாத்திரையை மேற்கொள்ள சொன்னது...




அவரும் சென்று வந்தார்...அந்த புகைப்படங்கள் கீழே...





இவரை பற்றி படிக்கும் பொது எல்லாம் எனது மனதில் எழும் ஒரே கேள்வி  - நீங்க நல்லவரா ? கெட்டவரா? என்பதுதான்...


சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...