தளபதி தீபனும் படையுடன் இணைந்தார். தாக்குதல் தொடங்கியது. காவல் அரண்கள் அழிக்க பட்டது. பின் கரும்புலி தாக்குதலும் நிகழ்த்தப்பட்டது. வானுர்தி இறங்குதளத்தை தாக்கி பிடிக்கும் நேரத்தில் இரு படைகளும் கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். இலங்கை ராணுவத்துக்கு வானுர்தி தளத்தை இழந்தால் தோல்வி நிச்சயம் என்று புரிந்திருந்தது. அதே வேளையில் வயல் வெளியில் இருந்து தாக்குதல் நடத்திவந்த புலிகள் அணி பின்னடைவை சந்திக்கும் செய்தி கிடைத்தது. பால்ராஜ் உடனடியாக தீபனை கட்டளை பீடத்தில் அமர்ந்து தாக்குதலை ஒருங்கினைக்க சொல்லிவிட்டு, லேப்.கேணல் நவநீதன் தலைமையில் இருந்த அணியில் அவரே நேரே களத்தில் இறங்கினார். வயல் வெளியில் இருந்த அந்த அணியை ஒருங்கிணைத்து தானே முன்னிருந்தது நடத்தி வானுர்தி தளத்தை பிடிப்பது என்ற முடிவோடு களத்தில் இறங்கினார்.
பகல் வேலை என்றாலும் மிகவும்
தந்திரமான தாக்குதளை முன்னெடுத்து வானுர்தி தளத்தை வெற்றிகரமாக கைப்பற்றினார்.
இந்த செய்தி அறிந்த இலங்கை படை தோல்வி உறுதி என்பதை புரிந்துகொண்டு பின் வாங்க
ஆரம்பித்தார்கள். தற்காப்பு தாக்குதல் நடத்திக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொண்டு
வன்னி முகாமில் தஞ்சம் அடைந்தார்கள். இந்த தாக்குதலில் மிகபெரும் ஆயுத குவியலை
புலிகள் கையகபடுத்தினார்கள். புலிகளுக்கு முதன்முதலில் 50 எம் எம் காலிபர் துப்பாக்கிகள்
பரிசாக கிடைத்தன.
பால்ராஜ் மற்றும் தீபன் (புலிகளின் உடையில் இருப்பவர்)
இந்த தாக்குதல் வெற்றிகள்
பால்ராஜின் படைநடத்தும் திறமையை வெளிபடுத்த ஒரு வாய்பாக அமைந்தது. அவரே கள முனையில் ஆயுதம் ஏந்தி நின்று படை நடத்தியது மற்ற புலி வீரர்களுக்கு
மிகபெரும் ஒரு மன உறுதியை கொடுத்தது.
அதுவே தாக்குதலில் வெற்றி பெறுவதர்க்கான மூல காரணமாகவும் இருந்தது.
இந்த வெற்றிகள் பால்ராஜ் என்கிற
வீரன் திறமையாக படை நடத்துகிறான் என்று எதிரிகளை தெரிந்து கொள்ளவைத்தது.
யானை இரவு முகாம் தாக்குதல்
முகாம்களில் மீது நடந்த
வெற்றிகரமான தாக்குதல் புலிகளுக்கு புதிய ஒரு உத்வேகத்தை கொடுத்தது. கைப்பற்றிய
ஆயுதங்கள் வேறு அவர்களுக்கு மேலதிக தெம்பை கொடுத்தது. அடுத்த இலக்கு யானை இரவு படை
முகாம் என்று தாக்குதல் திட்டம் தயாரிக்க
பட்டது. திட்டத்தின் பெயர் – “ நீர், நிலம் , ஆகாயம் “ என்றிடபட்டது.
மாத்தையா தலைமையில் இந்த தாக்குதல்
திட்டம் தயாரிக்க பட்டு தொடங்க பட்டது. பல்வேறு களமுனைகளில் புலிகள் இழப்புகளை
சந்தித்தார்கள். ஒரு சில சிறிய முகாம்கள் மட்டுமே தாக்கி அழிக்க முடிந்தது. இதற்கு
மாறாக பால்ராஜின் அணி ஒரு பெரிய முகாமை கைப்பற்றியது. புலிகள் பின்வாங்கும் நேரம்வரை அந்த முகாம் பால்ராஜ் படையின் வசமே
இருந்தது. பின் அந்த முகாமை தாக்கி அழித்துவிட்டு பால்ராஜ் படையணி திரும்பியது.
புலிகள் சுமார் 673 வீரர்களை அந்த போரில் இழந்தார்கள். புலிகளுக்கு இந்த தாக்குதல்
தோல்வி என்றாலும் பால்ராஜை பொறுத்தவரை இது ஒரு வெற்றிகரமான தாக்குதல் தான்.
சார்லஸ்
அன்டனி படையணி
புலிகளின் முதலாவது மரபுவழி படையணி
ஆகும். தலைவர் பிரபாகரனின் உற்ற நண்பர் சார்லஸ் அன்டனி பெயரில் தொடங்கப்பட்ட இந்த
அணிக்கு யாரை தளபதியாக நியமிப்பது என்கிற குழப்பம் நிலவ வில்லை. தலைவர் மனதில்
மிகதெளிவாக பால்ராஜ் என்கிற எண்ணம் இருந்தது. முதலாவது மரபுவழி படையணிக்கு பால்ராஜ்
தளபதியாக நியமிக்க பட்டார்.
காவல் அறன் தகர்ப்பு
முதல் திட்டமாக தேவையான ஆயுதங்களுக்கான பட்டியல்
தயாரிக்க பட்டது. தலைவரிடம் இந்த பட்டியல் வழங்க பட்டது. அந்த பட்டியலில்
குறிப்பிடப்பட்ட விசயம் இதுதான் –தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளது ஆனால்
பயிற்சிக்கு ஆயுதங்களோ , ரவைகளோ ( தோட்டாக்கள்) இல்லை என்பது தான். அதன்
தொடர்ச்சியாக தலைவரிடம் இருந்து பால்ராஜ் அவர்களுக்கு வந்த அறிவுறுத்தல் தேவையான
ரவைகளோ ஆயுதமோ இந்த நாட்டில் தான் இருக்கிறது , அதுவும் நமது எதிரியின் கையில்.
எடுத்துகொள் என்பது தான் அந்த அறிவுறுத்தல்.
திட்டம் தயாரிப்பு பணியில்
பால்ராஜ் களத்தில் இறங்கினார். முதலில் அருகில் இருக்கும்
காவல் தடுப்பு அரண்களை தாக்கி அழிப்பது அங்கிருக்கும் ஆயுதங்களை தங்கள்
வசமாக்குவது. இரண்டாவது ஆயுத சேமிப்பு நடக்கும் முகாம்களை அழிப்பது. இதற்கென திட்டம் தயாரிக்க
பட்டது.
தரை நீர் தாக்குதல்
தரை மற்றும் நீர் வழி தாக்குதலை தொடுப்பது என்பதுதான்
திட்டம். முதலில் தரைவழி நடவடக்கை மட்டுமே நடத்த பட்டுவந்தது, ராணுவ சோதனை
சாவடிகள் நீர் நிலைகளுக்கு அருகில்
அதிகமாக இருப்பதுதான் இந்த யோசனைக்கு காரணம். நீர்வழி வருவதில் மிகவும் ஆபத்தான விசயம்
எதிரிக்கு வருவது தெரிந்து அவர்கள் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தால் தப்பி போக
வழியில்லை . ஆனாலும் தாக்குதல் நடத்தப்பட்டு வெற்றிகள் குவிக்கப்பட்டது. பெரும்
அளவு ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
கைப்பற்ற பட்ட recoilless
rifle (RCLR) or recoilless gun
தலைவர் தளபதிகளை அழைத்து இப்படி
காவல் அரண் ஒவ்வொன்றாக அழித்து வந்தால் நமது நோக்கம் நிறைவேறாது. நீங்கள் வேறு
திட்டம் தயார் செய்து வாருங்கள் என்று அறிவுறுத்தினார்.
தலைவரின் அறிவுறுத்தலின் படி ஒரே
நேரத்தில் இருபத்து நான்கு காவல் அரண்களை தாக்கி அழிக்கும் திட்டம்
தயாரிக்கப்பட்டது. அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு தலைவரின் ஒப்புதலுக்கு
சென்றபோது அவரிடம் இருந்து வந்த அறிவுறுத்தல் – முதல் பெரிய தாக்குதல் திட்டத்தோடு
போகிறீர்கள், இதன் வெற்றி தோல்வி நமது ஏதிர்கால நடவடிக்கைகளில் மாற்றத்தை
ஏற்படுத்தும். எனவே மிகுந்த கவனத்தோடு உளவுத்தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரி
பார்த்துகொள்ளுங்கள். பயிற்சி மிக முக்கியம் என்பதே அது.
அதன் படி மீண்டும் உளவு தகவல்கள்
எதிரியின் எல்லைக்கே சென்று சரிபார்க்கபட்டது.
கடுமையான பயிற்சியும் நடைபெற்றது. இந்த நடவடிக்கை மிகபெரும் வெற்றியை கொடுத்தது. இது
எதிர்காலத்தில் மிகபெரும் வெற்றிகள் பெற முடியும் என்கிற தன்னம்பிக்கையை
ஏற்படுத்தி கொடுத்தது.
பொட்டுஅம்மான் மற்றும் பால்ராஜ்
இந்த நிகழ்விற்கு பிறகு சுமார் 250க்கும் அதிகமான காவல் அரண்கள் மற்றும் முகாம்கள்
தாக்கி அழிக்கப்பட்டன. இந்த வெற்றிகளை தொடர்ந்து பால்ராஜ் அவர்கள் இயக்கத்தின் ராணுவ
துணை தளபதியாக நியமிக்க பட்டார்.
“யாழ்தேவி”
1993 – இல் பூநகரி ராணுவ முகாம்
மீது தாக்குதல் நடவடிக்கை எடுப்பதர்க்காக பால்ராஜ் முழுவீச்சில் இருந்தார். உளவு
செய்திகள் மற்றும் ஆயுதப்பயிற்சிகான திட்டங்கள் , பொருட்களை ஒழுங்குபடுத்துதல்
போன்ற நடவடிக்கைகளில் தீவரமாக ஈடுபட்டிருந்த வேளையில் முக்கியம் வாய்ந்த ஒரு உளவு
செய்தி தலைவரிடம் இருந்து கிடைத்தது. யாழ் நகரை இணைக்கும் கிளாலி கடற்கரை சாலையை
மூடுவது என்கிற நோக்கத்தோடு யானையிறவு முகாமில் இருந்து பெரும் படையெடுப்பு நடக்க
இருக்கிறது அந்த திட்டத்தின் பெயர் “யாழ்தேவி” என்கிற விவரம் தான் அது. இந்த
திட்டம் வெற்றிபெற்றால் இலங்கை ராணுவத்திற்கு கிளாலி நகரம் வசப்பட்டுவிடும்.
யாழ்தேவி நடவடிக்கை வெற்றிபெற்றால் புலிகளில் ராணுவ
நடவடிக்கை மிகபெரும் ஒரு தொய்வை சந்திக்கும். யாழ்
நகரை இணைக்கும் கிளாலி கடற்கரை சாலையை மூடுவது மக்களை புலம் பெயரவைக்கும் ஒரு
முயற்சி . இதை மனதில் கொண்டு இந்த நடவடிக்கை தடுத்துநிறுத்தபட வேண்டும் என்கிற
உணர்வோடு திட்டம் தீட்டப்பட்டது. இது எதிர் தாக்குதல் ,கால அளவு மிகவும் குறைவு
யாழ் தேவி யாருக்கு வெற்றியை கொடுத்தது பார்போம்..அடுத்த பதிவில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக